செய்திகள்
திருப்பூரில் உள்ள தியேட்டரில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் தியேட்டர்களை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-08-22 13:00 GMT   |   Update On 2021-08-22 13:00 GMT
தியேட்டர்களில் வேலை பார்க்கும் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
திருப்பூர்:

கொரோனா ஊரடங்கு தளர்வில் நாளை (23-ந்தேதி) திங்கட்கிழமை முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட உள்ளதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் ஒவ்வொரு இருக்கையையும் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கேண்டீன்களும் தூய்மைபடுத்தப்பட்டு வருகின்றன.50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பதால் ஒரு இருக்கை இடை வெளிவிட்டு அமரும் வகையில் தியேட்டரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தியேட்டர்களில் வேலை பார்க்கும் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அரசு அறிவுரை வழங்கி உள்ளதால் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு தியேட்டர் நிர்வாகம் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி விடுமுறையில் இருந்த ஊழியர்களை வரவழைத்து இன்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்தனர்.
Tags:    

Similar News