செய்திகள்
கைது

உச்சிப்புளி அருகே கள்ளத்தனமாக பனை மரம் வெட்டிய 2 பேர் கைது

Published On 2021-08-21 07:16 GMT   |   Update On 2021-08-21 07:16 GMT
உச்சிப்புளி அருகே கள்ளத்தனமாக பனை மரம் வெட்டிய 2 பேரை கைது செய்த போலீசார் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

உச்சிப்புளி அருகே கடுக்காய் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது49). சாத்தக்கோன் வலசை அய்யனார் கோவில் அருகே இவருக்கும், இவரது பங்காளிகளுக்கும் சொந்தமான 14 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு1,200 பனை மரங்கள் இருந்தது.

தினந்தோறும் இவர் தோப்பிற்கு சென்று வருவது வழக்கம். அதே போல் நேற்று தோப்புக்கு சென்றபோது அங்கிருந்த 140 பனைமரங்கள் வெட்டப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவிசங்கர் உச்சிப்புளி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், நாகாட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), தேவிபட்டினம் அப்புசாமி (50), உச்சிப்புளி காத்தமுத்து (30) ஆகியோர் பனை மரங்களை வெட்டியதாக தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ராஜேந்திரன், அப்புசாமி ஆகியோரை கைது செய்து காத்தமுத்துவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News