செய்திகள்
வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் தீ விபத்து
எந்திரத்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவர் திருமங்கலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நூல் மில் நடத்தி வருகிறார். நேற்று காலை அங்குள்ள எந்திரத்தில் ஏற்பட்ட தீப்பொறி காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தனசேகர், வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 டன் பஞ்சு மற்றும் எந்திரங்கள், கட்டிட மேற்கூரை எரிந்து நாசமானது. பணியாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.