செய்திகள்
திருட்டு

தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-08-17 12:08 GMT   |   Update On 2021-08-17 12:08 GMT
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாரிவள்ளல் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு பாரிவள்ளல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனைக்குள் சென்று வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுதொடர்பாக பாரிவள்ளல் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News