செய்திகள்
உடன்குடி பகுதியில் இறைச்சி, மீன் விற்பனை மந்தம்
உடன்குடி பகுதியில் இறைச்சி வகைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
உடன்குடி:
உடன்குடி பகுதியில் கடந்த 15 நாட்களாக மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், கொடை விழா ஆகியன நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் அசைவத்தை விட்டுவிட்டு, சைவ பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் இறைச்சி வகைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விலை குறையவில்லை. விலையை குறைத்தால் கட்டுப்படி ஆகாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
உடன்குடி பகுதியில் கடந்த 15 நாட்களாக மீன் மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கிராமங்களில் கோவில் திருவிழாக்கள், கொடை விழா ஆகியன நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கிராம மக்கள் அசைவத்தை விட்டுவிட்டு, சைவ பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.
இதனால் இறைச்சி வகைகள் விற்பனை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விலை குறையவில்லை. விலையை குறைத்தால் கட்டுப்படி ஆகாது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.