செய்திகள்
பவானி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
பவானி ஆற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
மேட்டுப்பாளையம் ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி பாலம்மாள் (வயது 86). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த பாலம்மாள் ஓடந்துறை சென்று அங்குள்ள பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.