செய்திகள்
கண்காணிப்பு கோபுரம்

திருப்பூர் மாநகர போலீஸ் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கோபுரம்

Published On 2021-08-01 08:54 GMT   |   Update On 2021-08-01 08:54 GMT
போலீஸ் சோதனைச்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு வசதியாக இது அமைக்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர காவல் எல்லை பகுதிகளில் போலீசார் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். அவிநாசி சாலையில் அம்மாபாளையம், மங்கலம் சாலையில் குமரன் கல்லூரி, பல்லடம் சாலையில் வீரபாண்டி, காங்கயம் சாலையில் நல்லூர், ஊத்துக்குளி சாலையில் மண்ணரை, பி.என். சாலையில் போயம்பாளையம் , தாராபுரம் சாலையில் கோவில்வழி ஆகிய நகர எல்லைக்குள் நுழையும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இந்த சோதனைச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் இது அமைக்கப்படுகிறது. 

போலீஸ் சோதனைச்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு வசதியாக இது அமைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து கண்காணிப்பு கோபுரங்களும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News