செய்திகள்
வடமதுரை அருகே ரெயில் மோதி வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரெயில் மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல்- திருச்சி ரெயில்பாதையில் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த நபர் ரெயிலில் வந்தவரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என தெரியவில்லை. நீல நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்துள்ளார்.
எனவே சுற்றுவட்டார பகுதியில் யாரும் மாயமாகி உள்ளனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்- திருச்சி ரெயில்பாதையில் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த நபர் ரெயிலில் வந்தவரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என தெரியவில்லை. நீல நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்துள்ளார்.
எனவே சுற்றுவட்டார பகுதியில் யாரும் மாயமாகி உள்ளனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.