செய்திகள்
தற்கொலை

காதல் திருமணம் செய்த வாலிபர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

Published On 2021-07-30 09:18 GMT   |   Update On 2021-07-30 09:18 GMT
திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகில் உள்ள தர்மபுரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(35). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தபோது மதினாபானு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கமலக்கண்ணன் தர்மபுரியில் வசித்து வந்தார்.

கொடைரோடு சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

மனைவியை அழைத்தும் அவர் வராததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கமலக்கண்ணன் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். கோவை-நாகர்கோவில் வழித்தடத்தில் வந்த ரெயில் அவர் தலை மீது ஏறி நசுக்கியதில் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News