செய்திகள்
கோப்புப்படம்

பெண்கள் விடுதியை நடத்த விண்ணப்பிக்கலாம்

Published On 2021-07-30 08:45 GMT   |   Update On 2021-07-30 08:45 GMT
விடுதியில் 50 நபர்கள் தங்கலாம். மாத வாடகையாக ஒரு நபருக்கு ரூ. 400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது
திருப்பூர்:

சமூகநலத்துறை சார்பில் பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதி திருப்பூர்  நெருப்பெரிச்சலில் அமைந்துள்ளது. இந்தநிலையில் விடுதியை ஒப்பந்த முறையில் நடத்த விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி விடுதியில் 50 நபர்கள் தங்கலாம். மாத வாடகையாக ஒரு நபருக்கு ரூ.400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் பகிர்ந்தளிக்கும் முறையில் நிர்ணயிக்கப்படும். விடுதியில் தங்க ரூ. 2,000  காப்புறுதி தொகை செலுத்த வேண்டும். ரூ.10 அனுமதி நுழைவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விருப்பமுள்ள நிறுவனங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரடியாகவோ, 0421 2971168 என்ற எண்ணிலோ, dswo.tpr@gmail.com என்ற இணையதள முகவரியிலோ விண்ணப்பிக்கலாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags:    

Similar News