செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே பணம் வைத்து சூதாட்டம்- 4 பேர் கைது

Published On 2021-07-28 14:42 GMT   |   Update On 2021-07-28 14:42 GMT
திருவள்ளூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்வெல் ஜோசப் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர் ரங்கநாதன் நகர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த வெண்மனம்புதூர் காந்தி நகரை சேர்ந்த கபூர் (வயது 42), சுரேஷ் (42), பிரபு (37), அப்துல்ரஹீம் (50) ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள் மற்றும் ரொக்கப்பணத்தை கைப்பற்றி இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News