செய்திகள்
தள்ளுபடி விலையில் சிலிண்டர் விற்பனை-விபத்து அபாயம்
3 சிலிண்டர் எடுத்தால் தள்ளுபடி அளிப்பதாக கூறி வெளிமாவட்டங்களில் இருந்து சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் கடந்த சில மாதங்களாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏஜென்சிகள் ஓட்டல், பேக்கரிகளுக்கு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நல்லூர் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 3 சிலிண்டர் எடுத்தால் தள்ளுபடி அளிப்பதாக கூறி வெளிமாவட்டங்களில் இருந்து சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
ஓட்டல், பேக்கரி, தள்ளுவண்டி கடைகளில் கமர்சியல் சிலிண்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே எண்ணை நிறுவனங்கள் மூலம் ஆய்வு நடத்தி வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சிலிண்டர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.