செய்திகள்
கைது

மதுரையில் நகை கடையில் திருடிய பெண் ஊழியர் கைது

Published On 2021-07-23 11:28 GMT   |   Update On 2021-07-23 11:28 GMT
மதுரையில் நகை கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்பு உடைய நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் ரகு (வயது 38). மதுரை வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

தல்லாகுளம் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் இவர் கொடுத்த புகாரில், எங்கள் கடையில் ரூ.25 ஆயிரம் மதிப்பு உடைய வெள்ளி, தங்க நகைகளை யாரோ திருடிச் சென்று விட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றிய போலீசார் அதிலுள்ள காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, கடையில் வேலை பார்க்கும் செல்லூர் மேல அண்ணா தோப்பு ராஜசேகர் மனைவி கீதா (வயது 37) வெள்ளி, தங்க பொருட்களை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து தல்லாகுளம் போலீசார் நகை கடையில் பொருட்களை திருடியதாக கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News