செய்திகள்
கைது

சேடப்பட்டி அருகே திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

Published On 2021-07-23 10:41 GMT   |   Update On 2021-07-23 10:41 GMT
மதுரை சேடப்பட்டி அருகே திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை சேடப்பட்டியை அடுத்த கே.பரமன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 21). இவர் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் முடித்தவர்.

இவருக்கு 17 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் தாய்க்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மகளை கண்டித்தார்.

இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணின் தந்தை சமீபத்தில் இறந்துவிட்டார். இந்த நிலையில் சதீஷ் கே.பரமன்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்துவிட்டார்.

அப்போது “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தார். இதனை அந்த பெண் நம்பினார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சதீஷ் அந்த பெண்ணை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் கர்ப்பம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாயார் இதுதொடர்பாக சேடப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ சுலோசனா வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News