செய்திகள்
கள்ளக்காதலுக்காக விவசாயியை கொன்ற அரசு பள்ளி ஆசிரியர் கைது
நிலக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்காக விவசாயியை கொன்ற அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் கே.குரும்பப்பட்டியை சேர்ந்த மொக்கராஜ் மகன் சென்ராயன் (வயது39). விவசாயி. இவர் கடந்த 10.3.2021 அன்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் சென்ராயன் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. சென்ராயனின் மனைவி வனிதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அய்யனாருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை கண்டித்ததால் வனிதாவும், அய்யனாரும் சேர்ந்து சென்ராயனை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகம் ஆடி உள்ளனர்.
ஏற்கனவே வனிதாவை கைது செய்த போலீசார் அய்யனாரை தேடி வந்தனர். கொம்புக்காரன்பட்டியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை அருகில் கே.குரும்பப்பட்டியை சேர்ந்த மொக்கராஜ் மகன் சென்ராயன் (வயது39). விவசாயி. இவர் கடந்த 10.3.2021 அன்று அதிகாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கில் சென்ராயன் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. சென்ராயனின் மனைவி வனிதாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அய்யனாருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை கண்டித்ததால் வனிதாவும், அய்யனாரும் சேர்ந்து சென்ராயனை கொலை செய்து விட்டு தற்கொலை நாடகம் ஆடி உள்ளனர்.
ஏற்கனவே வனிதாவை கைது செய்த போலீசார் அய்யனாரை தேடி வந்தனர். கொம்புக்காரன்பட்டியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.