செய்திகள்
கோப்புபடம்

கேரளாவில் இன்று 13 ஆயிரம் பேருக்கு கொரோனா - 87 பேர் பலி

Published On 2021-07-15 17:29 GMT   |   Update On 2021-07-15 17:29 GMT
கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 82 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பரவல் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 13 ஆயிரத்து 773 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 17 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 12 ஆயிரத்து 370 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 82 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு இன்று 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 25 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 10.95% என்ற அளவில் உள்ளது.
Tags:    

Similar News