செய்திகள்
வாட்டாத்திக்கோட்டை போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்
திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா நெய்வேலி கடைவீதியில் நேர்மையாக செயல்படாமல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவிடாமலும் புகார் அளிக்க வருபவர்களை சிறிதும் மதிக்காமலும் உண்மைக்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதிகப்படியாக பொய் வழக்கு பதியபடுவதாக வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தை கண்டித்து இன்று காலை சாலை மறியல் நடந்தது.
பட்டுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் அமர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்ராபதி தலைமையில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் பேராவூரணி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும், 150 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கு விரைந்து வந்த பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.