செய்திகள்
கோப்புப்படம்

பணகுடி அருகே செல்போன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-07-14 09:42 GMT   |   Update On 2021-07-14 09:42 GMT
பணகுடி அருகே சிக்னல் கிடைக்காமல் வீட்டுக்கு வெளியே வந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பணகுடி அருகே உள்ள பழவூர் பகுதியை அடுத்த மாறன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி உஷாபானு (வயது 42). 

இவர் நேற்று வீட்டில் இருந்து உறவினர்களிடம் செல்போனில் பேசினார். அப்போது செல்போன் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. இதனால் உஷா பானு வீட்டிற்கு வெளியே ரோட்டிற்கு வந்து செல்போனில் பேசினார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உஷா பானுவின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த செயின் 2 பவுன்எடை உள்ளது. இதன் மதிப்பு ரூ 75 ஆயிரம் ஆகும். 

இது குறித்து உஷா பானு பழவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News