செய்திகள்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை.

அமராவதி சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 2 மாதம் சம்பளம்

Published On 2021-07-13 08:40 GMT   |   Update On 2021-07-13 08:40 GMT
ஆலையின் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சீராக சம்பளம் வழங்கப்படுவது இல்லை.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். நடப்பாண்டு கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அரவை தொடங்கி தற்போது  நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல மாதம் சம்பளம் நிலுவையாக இருந்தது. ஆலையின் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சீராக சம்பளம் வழங்கப்படுவது இல்லை. தற்போது பிப்ரவரி தொடங்கி ஜூன் மாதம் வரை ஐந்து மாத சம்பளம் நிலுவை ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 

இதுகுறித்து அரசு கவனம் செலுத்தி சம்பளம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆலைத்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அரசு பிப்ரவரி, மார்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கான சம்பளம் வழங்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வங்கிக்கணக்கில் சம்பளத்தொகை செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News