செய்திகள்
விசைத்தறி கூடம்.

மாத ஊதியம் ரூ.21ஆயிரம்-விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-07-12 09:57 GMT   |   Update On 2021-07-12 09:57 GMT
தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவினாசி:

அவிநாசியில் விசைத்தறித்தொழிலாளர் மாநில சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, மாத ஊதியம் ரூ.21ஆயிரம், பஞ்சப்படி உள்ளிட்டவை வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். 

தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, இலவச வீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும், விசைத்தறித் தொழிலாளர்கள் உள்ள மாவட்டங்களில் ஜவுளி சந்தைகள் அமைக்க வேண்டும். 

நோய்த்தொற்றுக் காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.எனவே அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News