செய்திகள்
கோப்புபடம்

சிறுமிக்கு திருமணம்-3 பேர் கைது

Published On 2021-07-10 09:22 GMT   |   Update On 2021-07-10 09:22 GMT
சமூக நலத்துறை மேம்பாட்டு அலுவலர் சிவகாமி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் தாராபுரத்தை சேர்ந்த சசிகுமார் (வயது 24) என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் திருமணம் நடந்தது. இதுகுறித்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.

இதையடுத்து சமூகநலத்துறை மேம்பாட்டு அலுவலர் சிவகாமி இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பெருமாநல்லூரை சேர்ந்த திருமணதரகர்கள் அம்பிகா (38), வள்ளி (35) ஆகியோர் இத் திருமணத்தை நடத்தி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து வடக்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குழந்தை திருமண தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமார், அம்பிகா மற்றும் வள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News