செய்திகள்
கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

Published On 2021-07-07 18:17 GMT   |   Update On 2021-07-07 18:17 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 70 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 27 ஆயிரத்து 642 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 ஆயிரத்து 647 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 196 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 196-ல் இருந்து 197-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 800 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 70 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 642-ல் இருந்து 27 ஆயிரத்து 712-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News