செய்திகள்
ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
ஆரல்வாய்மொழி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வம் தலைமையிலான போலீசார் முப்பந்தல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்ணுப்பொத்தையில் சந்தேகப்படும் வகையில் நின்ற 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 2 பேரிடமும் தலா 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அகஸ்தீஸ்வரம் தண்ணினங்கரையை சேர்ந்த அஜித் (வயது 23), புவியூர் ஆத்தங்கரை சாலை தேங்காய்காரன் குடியிருப்பை சேர்ந்த சேர்மன்துரை (19) என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் குமாரபுரம் தோப்பூர் பகுதியில் சென்றபோது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜாவூர் பகுதிைய சேர்ந்த கண்ணன்(23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.