செய்திகள்
கொள்ளை

அம்மன் கோவிலில் நகைகள் திருட்டு

Published On 2021-07-06 10:27 GMT   |   Update On 2021-07-06 10:27 GMT
ஏர்வாடி அருகே அம்மன் கோவிலில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் மேலூரை சேர்ந்தவர் அப்பாத்துரை (வயது 57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் ஊருக்கு மேல்புறமுள்ள தனது தோட்டத்தில் வன பேச்சியம்மன் கோவில் அமைத்து வழிபட்டு வருகிறார். இங்கு வனபேச்சியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு மர்மநபர்கள் கோவில் முன்புறமுள்ள இரும்பு கதவை உடைத்து, உள்ளே புகுந்து, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1 பவுன் எடையுள்ள தங்க தாலியை திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். மறுநாள் காலையில் தோட்டத்துக்கு சென்ற அப்பாத்துரை கோவிலில் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News