செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு- அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள்
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. அதன்பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
* ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
*அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம்.
* உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.... ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
* தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றி 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.
*பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
*திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல், குளங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.
*மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.