செய்திகள்
ஆண்டிபட்டியில் மாடியிலிருந்து தவறி விழுந்த 1½ வயது குழந்தை பலி
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் கருத்தமலைபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமலைப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 28). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது 1½ வயது ஆண்குழந்தை யோகேஸ்வரன் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது நிலைதடுமாறி கீழே இறங்கும் படியில் இருந்து தவறி விழுந்தான். படிக்கட்டின் பக்கவாட்டு கைபிடி சுவரும் பராமரிப்பில்லாமல் சேதமாகி இருந்ததால் கைபிடி சுவரின் ஒரு பகுதி இடிந்து அவற்றின் செங்கல்கள் குழந்தையின் மேல் விழுந்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே குழந்தை யோகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்து குறித்து க.விலக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் கருத்தமலைபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.