செய்திகள்
மின்சார ரெயில்

ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரெயில்கள் இயக்கம்

Published On 2021-07-02 02:08 GMT   |   Update On 2021-07-02 02:08 GMT
கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் ஏற்கனவே 50 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 26 மின்சார ரெயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
சென்னை:

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கூடுதலாக 26 மின்சார ரெயில் சேவைகள் கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் வருகிற 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. அந்தவகையில் ஏற்கனவே 50 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 26 மின்சார ரெயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

அதேபோல், சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே அனைத்து நாட்களும் ஒரு ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. அந்தவகையில் 4-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 447 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
Tags:    

Similar News