செய்திகள்
கோப்புபடம்.

தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டுகோள்

Published On 2021-06-30 07:04 GMT   |   Update On 2021-06-30 07:04 GMT
தனித்தேர்வர்கள் பதிவு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில்கின்றனர்.
உடுமலை:

கொரோனா பரவல் காரணமாக  தமிழகத்தில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் தனித்தேர்வர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தனித்தேர்வர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை கல்வி மேம்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் லெனின்பாரதி கூறியதாவது:-
தனித்தேர்வர்கள் பதிவு செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில்கின்றனர். கொரோனா பரவல் உள்ளதால் தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

தனித்தேர்வர்களுக்கும் தேர்ச்சிக்கான சராசரி மதிப்பெண் நடைமுறையை உருவாக்க வேண்டும். அதன் வாயிலாக அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
Tags:    

Similar News