செய்திகள்
கோப்புப்படம்.

மூலனூரில் 1-ந்தேதி முதல் பருத்தி ஏலம்

Published On 2021-06-26 08:45 GMT   |   Update On 2021-06-26 08:45 GMT
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6வாரங்களாக ஏலம் ரத்து செய்யப்பட்டது
வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர்  ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஜூலை 1-ந்தேதி முதல் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூலனூர் விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏல விற்பனை நடைபெற்று வந்தது. கொரோனா  பொதுமுடக்கம் காரணமாக கடந்த 6 வாரங்களாக ஏலம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது பருத்தி வரத்து துவங்கியுள்ளதால்  அரசின் அனுமதியுடன் நோய்த்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வரும் ஜூலை 1-ந்தேதி முதல் வாரந்தோறும் தொடர்ந்து விற்பனை நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளும், வியாபாரிகளும் பங்கேற்றுப்பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News