செய்திகள்
கோப்புப்படம்

ஊருக்கு அனுப்பி வைக்காததால் வடமாநில சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-24 07:16 GMT   |   Update On 2021-06-24 07:16 GMT
சமையல் செய்ய உதவியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் இருந்து ரூப்சாராணி அழைத்துவரப்பட்டார்.
பல்லடம்:

மேற்குவங்க மாநிலத்தை  சேர்ந்த கோவிந்தாபிஸ்வான் மகள் ரூப்சாராணி பிஸ்வான்(வயது15). இவரது சகோதரிகள் சரஸ்வதி பிஸ்வான்(23), சுக்லாபிஸ்வான்(21) ஆகியோர் பல்லடம் அருகேயுள்ள தனியார் மில்லில்  வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு சமையல் செய்ய உதவியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் இருந்து ரூப்சாராணி அழைத்துவரப்பட்டார். ஆனால் அவருக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை .

இதனால் அடிக்கடி பெற்றோரிடம் கொண்டு விட்டு விடுங்கள் என சகோதரிகளிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் சகோதரிகள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.ரூப்சாராணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் கூரையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் ரூப்சாராணி தொங்கிக்கொண்டிருந்தார். 

அதிர்ச்சி அடைந்த இருவரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரூப்சாராணியை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், ரூப்சாராணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சரஸ்வதி பிஸ்வான் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News