செய்திகள்
தஞ்சை அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலியமங்கலம்:
தஞ்சை அருகே பூண்டி நடுத்தெரு பகுதியில் அம்மாப்பேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (வயது46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.