செய்திகள்
பிடிப்பட்ட பாம்பு.

பனியன் நிறுவனத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு

Published On 2021-06-22 08:32 GMT   |   Update On 2021-06-22 08:32 GMT
வனத்துறை பணியாளர்கள் பாம்பினை பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.
திருப்பூர்

திருப்பூர் அவினாசி சாலை தண்ணீர் பந்தல் பகுதியில் தனியார் பனியன் நிறுவனம் உள்ளது. இந்நிறுவன வளாகத்தில் 6 அடி நீள பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. 

இதனைப்பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர். உடனே இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த பாம்புபிடி வீரர் விஜய், பூச்செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சாரை பாம்பினை லாவகமாக பிடித்தார்.பின்னர் அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தார். 

வனத்துறை பணியாளர்கள் பாம்பினை பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் பனியன் நிறுவன வளாகத்தில்  சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News