செய்திகள்
கோப்புப்படம்

வீரபாண்டி-ஆண்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-06-21 08:37 GMT   |   Update On 2021-06-21 08:37 GMT
பராமரிப்பு பணிகாரணமாக வீரபாண்டி, ஆண்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்

திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக நாளை  22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)  காலை 9மணி முதல் மதியம்  12 மணி வரை  டி.பி., நகர், முருகம்பாளையம், கோடீஸ்வர் கார்னர், எஸ்.கே., நகர், இடுவாய் கிழக்கு, ஆர்.கே., காட்டன் ரோடு, அம்மன் நகர், தாந்தோணி நகர், எவர்கிரீன் அவென்யூ பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது-.

மதியம் 1மணி முதல் மாலை  4மணி வரை   சுண்டமேடு, ஜவஹர் நகர், அம்பேத்கர் நகர், சூர்யா நகர், செல்லம்நகர், ஜீவா நகர், குறிஞ்சிநகர், ஆண்டிபாளையம், எஸ்.ஆர்., நகர் வடக்கு மற்றும் தெற்கு, ஸ்ரீநிதி கார்டன், கொக்குப்பாறை, கார்த்திக்நகர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News