செய்திகள்
கம்பைநல்லூர் அருகே சிறப்பு மருத்துவ முகாம்
கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முருக்கம்பட்டி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மொரப்பூர்:
கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முருக்கம்பட்டி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பூமணி தலைமையிலான மருத்துவ, குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கப்பட்டன. முகாமில் 62 பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. முகாமில், சுகாதார ஆய்வாளர் உதயகுமார், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.