செய்திகள்
மாயம்

பாளையில் இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2021-06-19 09:21 GMT   |   Update On 2021-06-19 09:21 GMT
பாளையில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பாளை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு பட்டம்மாள் என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். மாரியப்பன் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது 2-வது மகள் பேராட்சி செல்வி ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

ஊரடங்கால் சொந்த ஊருக்கு அவர் வந்து விட்டார்.  அவருக்கு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த பேராட்சி செல்வி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பேராட்சி செல்வியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News