செய்திகள்
பாளையில் இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை
பாளையில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு பட்டம்மாள் என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். மாரியப்பன் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது 2-வது மகள் பேராட்சி செல்வி ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
ஊரடங்கால் சொந்த ஊருக்கு அவர் வந்து விட்டார். அவருக்கு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த பேராட்சி செல்வி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பேராட்சி செல்வியை தேடி வருகின்றனர்.
பாளை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு பட்டம்மாள் என்ற மனைவியும், 2 மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். மாரியப்பன் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது 2-வது மகள் பேராட்சி செல்வி ஈரோட்டில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
ஊரடங்கால் சொந்த ஊருக்கு அவர் வந்து விட்டார். அவருக்கு திருமண ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்த பேராட்சி செல்வி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் பாளை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பேராட்சி செல்வியை தேடி வருகின்றனர்.