செய்திகள்
கோப்புபடம்

பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை-ஆயத்தப்பணிகள் தீவிரம்

Published On 2021-06-17 08:02 GMT   |   Update On 2021-06-17 08:02 GMT
தலைமையாசிரியர்களுக்கு உதவியாக பள்ளி அருகே உள்ள ஆசிரியர்கள் வருகை புரிகின்றனர்.
உடுமலை:

உடுமலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணியும் நடக்கிறது. இதன் காரணமாக தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

இதையொட்டி பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தப்படுத்துதல், கல்வி தொலைக்காட்சிக்கான கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மேலும்  இனிவரும் நாட்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர் சேர்க்கை துவங்கி உள்ள நிலையில் தலைமையாசிரியர்களுக்கு உதவியாக பள்ளி அருகே உள்ள ஆசிரியர்கள் வருகை புரிகின்றனர்.

இனிவரும் நாட்களில் ஊரடங்கில் அதிக தளர்வுகள் அளிக்கப்படவுள்ளது. அப்போது அனைத்து ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிவர். அதற்கு தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது என்றனர்.
Tags:    

Similar News