செய்திகள்
பட்டுக்கோட்டையில் டிப்பர் லாரி மோதி 2 பெண்கள் பலி
பட்டுக்கோட்டையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி நீலா (வயது 30), அதே பகுதியை சேர்ந்த பாபு மனைவி விஜயசாந்தி (32). இருவரும் மோட்டார் சைக்கிளில் சூரப்பள்ளம் பைபாஸ் அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் நீலா சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விஜயசாந்தி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி விஜயசாந்தியும் உயிரிழந்தார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.