செய்திகள்
கரூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
கரூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
கரூர் மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த கம்ம நல்லூரில் கஞ்சா விற்பதாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள தென்னந்தோப்பில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கம்மநல்லூர் விஜய் (வயது 26) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த தினேஷ்குமார்(24) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.