செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

வல்லம் பகுதியில் 425 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-06-13 09:43 GMT   |   Update On 2021-06-13 09:43 GMT
பெரியார்நகர், ரெட்டிப்பாளையம், சித்தர்காடு, வடக்குப்பட்டு, மேலவெளி பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.

வல்லம்:

வல்லம் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதார துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வல்லத்தில் உள்ள அரசு மருத்துவமனை முகாமில் 21 பேருக்கு கொரோனா பரசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் பெரியார்நகர், ரெட்டிப்பாளையம், சித்தர்காடு, வடக்குப்பட்டு, மேலவெளி பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. மொத்தம் 425 பேருக்கு சுகாதார துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். வல்லம் வட்டார சுகாதார அலுவலர் (பொ) டாக்டர் அகிலன், சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேலு ஆகியோர் முகாம்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News