செய்திகள்
தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி அவசியம் குறித்த கருத்தரங்கு-நாளை மறுநாள் நடக்கிறது

Published On 2021-06-13 07:05 GMT   |   Update On 2021-06-13 07:05 GMT
கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.’
உடுமலை:

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், கோவை ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் 15-ந்தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் வாயிலாக நடக்கும் கருத்தரங்கில் கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படவுள்ளது. விஞ்ஞான் பிரச்சார் நிறுவன முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் பங்கேற்க உள்ளார்.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரம் அறிய 8778201926 என்ற செல்போன் எண்ணையும், galilioscienceclub@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News