செய்திகள்
கோப்புப்படம்

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலி

Published On 2021-06-13 03:15 GMT   |   Update On 2021-06-13 03:15 GMT
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 420 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 64,640 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 5,957 பேர் உள்ளனர். 986 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 57,928 ஆகும்.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 11 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில்6 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 755 ஆக உயர்ந்தது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் வீடு திரும்பி வருவதால், படுக்கைகளும் அதிக அளவில் காலியாக உள்ளன. ஆக்சிஜன் படுக்கை 585, சாதாரண படுக்கை 1,096, தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை 95 என மொத்தம் 1,776 படுக்கைகள் காலியாக உள்ளன.
Tags:    

Similar News