செய்திகள்
மரணம்

சூலூர் அருகே வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் வாலிபர் தவறி விழுந்து பலி

Published On 2021-06-12 10:04 GMT   |   Update On 2021-06-12 10:04 GMT
கோவை சூலூர் அருகே வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் மேலே இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கருமத்தம்பட்டி:

கோவை சூலூர் கிழக்கு அரசூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணிக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று வழக்கம்போல கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். அங்கு மேலே நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News