செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- மூதாட்டி பலி

Published On 2021-06-12 09:54 GMT   |   Update On 2021-06-12 09:54 GMT
கோவையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

கோவை இடையர் பாளையம் -தடாகம் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த மூதாட்டி மீது மோதியது.

பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கு நிற்காமல் தப்பிச் சென்றனர். இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி பலத்த காயமடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூதாட்டியை மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் குறித்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News