செய்திகள்
கைது

ஆனைமலையில் கஞ்சா விற்ற 5 வாலிபர்கள் கைது

Published On 2021-06-08 09:45 GMT   |   Update On 2021-06-08 09:45 GMT
ஆனைமலை பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

ஆனைமலை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆனைமலை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் நின்று இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கும் இங்கும் அலை மோதினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்த தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ய அங்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. 

போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆனைமலையை சேர்ந்த சந்து முகமது (வயது 30), கோகுலகிருஷ்ணன் (24), பொள்ளாச்சியை சேர்ந்த சரவணக்குமார் (26), பிரபாகரன் (35) மற்றும் பிரகாஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் பணம் 5500-யை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News