செய்திகள்
தோகைமலை பகுதியில் முள்காட்டில் மது விற்ற வாலிபர் மீது வழக்கு
தோகைமலை பகுதியில் முள்காட்டில் மது விற்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வடசேரி ஒண்டிவீரன் கோவில் தெருவை சேர்ந்த அந்தோணி மகன் மாரிமுத்து (வயது 27) என்பவர் வடசேரி வேலாயி பண்ணைகளத்து பகுதியில் உள்ள முள்காட்டில் பதுக்கி மது விற்ற போது தோகைமலை போலீசார் அவரை பிடித்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.