செய்திகள்
கோப்புபடம்

நெல்லையில் டி.வி. பார்த்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

Published On 2021-06-04 08:12 GMT   |   Update On 2021-06-04 08:12 GMT
நெல்லை அருகே டிவி பார்த்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறித்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி லீலா (வயது 78). இவர் சம்பவத்தன்று டி.வி. பார்த்து கொண்டிருந்தார். முன்பக்க கதவை உள்புறமாக பூட்டி இருந்தார்.

அப்போது 4 பேர் உறவினர்கள் போல் வந்து, முன்பக்க கதவின் இடைவெளி வழியாக கையை விட்டு தாழ்பாளை விலக்கி கதவை திறந்தனர்.

சத்தம் கேட்டு லீலா எழுந்து வருவதற்குள், 4 பேரும் அரிவாள் மற்றும் கத்தியுடன் லீலாவை மிரட்டி அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேடியோவையும் தூக்கி கொண்டு ஓடிவிட்டனர்.

அதன்பிறகு தான் உள் அறையில் படுத்திருந்த குமாரசாமி சத்தம் கேட்டு வெளியே வந்து, கொள்ளை சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதுகுறித்து லீலா நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முகைதீன் அப்துல்லா, சாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளுடன் தப்பி ஓடிய 4 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News