செய்திகள்
கைது

திருவோணம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

Published On 2021-06-02 09:59 GMT   |   Update On 2021-06-02 09:59 GMT
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கி பட்டு நெடுங்குளம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக திருவோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நரங்கி பட்டு நெடுங்குளம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக திருவோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் தலைமை காவலர் சரவணன், ஏட்டு ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நரங்கி பட்டு நெடுங்குளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கறம்பக்குடி பூசாரி தெரு பிரபாகரன் (வயது 27), மணிக்கிரான் விடுதி ராஜா (32), கறம்பக்குடி சடையன் தெரு திருமேனி நாதன் (32) மணிக் ரான் விடுதி சரவணன் (36) நெய்வேலி வடபாதி குணசீலன் (36) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 7 இருசக்கர வாகனம் ரூ.63 ஆயிரத்து 365 பணம், செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய கரம்பக்குடி நைனன், கார்த்திக் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News