செய்திகள்
கைது

ஆலாந்துறை அருகே தச்சு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-06-01 10:33 GMT   |   Update On 2021-06-01 10:33 GMT
கோவை அடுத்த ஆலாந்துறை அருகே தச்சு தொழிலாளியை தாக்கியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை அடுத்த ஆலாந்துறை சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ்( வயது 44). தச்சுத் தொழிலாளி. இவர் அங்குள்ள லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறார். இவரிடம் கடந்த 6 மாதங்களாக சிலர் வேலை செய்து வந்தனர். அதில் 2 வாலிபர்களுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பள பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த வாலிபர்களுக்கும், நாகராஜுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று ஆலாந்துறை லட்சுமி நகர் பகுதியில் நின்றிருந்த நாகராஜிடம் அந்த வாலிபர்கள் தங்களுக்கு தரவேண்டிய சம்பளத்தை தருமாறு கேட்டுள்ளனர். 

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் நாகராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொண்டாமுத்தூர் ஓணாபாளையத்தை சேர்ந்த முகேஷ் (29) மற்றும் கார்த்திக் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News