செய்திகள்
அம்மா உணவகம்

அம்மா உணவகத்தில் இலவச உணவு

Published On 2021-05-30 06:06 GMT   |   Update On 2021-05-30 06:06 GMT
அரசின் உத்தரவையடுத்து உடுமலை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
உடுமலை:

உடுமலை கல்பனா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை எளிய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளில் உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சரவணக்குமார், அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி உடுமலை அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News