செய்திகள்
பாவூர்சத்திரத்தில் ஊரடங்கை மீறி திறப்பு : 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
பாவூர்சத்திரத்தில் 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாவூர்சத்திரம் வி.ஏ.நகர் பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி 2 மளிகை கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த 2 கடைகளுக்கும் சென்று தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பாவூர்சத்திரம் பகுதியில் இதுபோல் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாவூர்சத்திரம் வி.ஏ.நகர் பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி 2 மளிகை கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த 2 கடைகளுக்கும் சென்று தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பாவூர்சத்திரம் பகுதியில் இதுபோல் கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்